துறவிகள் யாத்திரை

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட பல்வேறு குடிசைப்பகுதிகளில், ஹிந்து ஆன்மீகத் துறவிகள் மக்களின் வீடுவீடாக சென்று தீபமேற்றி குடிசைப்பகுதியில் வாழும் மக்களுக்கு நல்லாசிகள் வழங்கினர். சேவாபாரதி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடத்த வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.