துரைமுருகனுக்கு பதிலடி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழாவின்போது சட்டசபை கூட்டத் தொடரில் காமராஜரை குறித்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சு தொடர்பாக பேசிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துரைமுருகன் காமராஜர் பற்றி கூறியது வருத்தம் அளிக்கிறது. காமராஜர் போன்ற எளிமையான முதல்வரை உலகமே பார்த்ததில்லை. காமராஜரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும். துரைமுருகன் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களும் நேசிக்கின்றனர். துரைமுருகன் தான் பேசியதை திரும்ப பெற வேண்டும்’ என கூறினார்.