தி.மு.க., எம்.பி.,க்கு பா.ஜ., கண்டனம்

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

ஹிந்தி பேசும் மாநிலங்கள், அதாவது, ‘மாட்டு மூத்திர மாநிலங்களில் தான் பா.ஜ., வெல்ல முடியும்’ என, தி.மு.க., – எம்.பி., செந்தில் தெரிவித்துள்ளார். உழைக்கும் தமிழ் மக்களின் வியர்வையை குடித்து, ஊழல் வழியே பிழைப்பு நடத்தும் கட்சியினர், ஹிந்தி பேசும் மாநிலங்களை எள்ளி நகையாடுவது வெட்கக்கேடு.

ஹிந்தி பேசும் மாநிலங்கள், எங்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறக்கூடாது என, தி.மு.க., முடிவு கட்டி விட்டதாக தெரிகிறது. சனாதனத்தை பேசி காங்கிரசை துடிக்க வைத்த பின், தற்போது மாட்டு மூத்திரம், பசு என, காங்கிரசை அழிக்க துவங்கி விட்டனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.