திருப்பதியில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா சுவாமி தரிசனம்

திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா (மே 11) சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தரிசனத்திற்கு பின் தனது எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது; திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரார்த்தனையுடன் எனது நாள் தொடங்கியது, வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசீர்வாதம், இந்த புனித ஸ்தலத்தின் அமைதியும், வெங்கடேஸ்வரரின் தெய்வீக சக்தியும் நம் இதயங்களை அமைதியால் நிரப்புகின்றன.
நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். வெங்கடேசப் பெருமான் நம் மீது அருள் பொழிந்து செழிப்பு, ஒற்றுமை மற்றும் அமைதியை நோக்கி நம்மை வழிநடத்தட்டும். இவ்வாறு அந்த பதிவில் நட்டா கூறியுள்ளார்.