திருடப்பட்ட 22 சிலைகள்

ஒடிசா, குர்தா மாவட்டத்தில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான தக்ஷ பிரஜாபதி சிவன் கோயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்குள்ள கனகதுர்கா, கோபிநாத், கலியுகேஷ்வர் உள்ளிட்ட 22 சாமி சிலைகள் திருடப்பட்டன. அஷ்ட தாதுக்களால் செய்யப்பட்ட இந்த சிலைகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்டவை. இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் இது வரை 300க்கும் மேற்பட்ட பழங்கால கோயில் சிலைகள் திருடப்பட்டுள்ளன.