தலிபானை காட்டிக்கொடுக்காத என்.டி.டி.வி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகிக்கு இரங்கலைத் தெரிவித்த என்.டி.டி.வி செய்தி தொகுப்பாளர் ரவீஷ் குமார், அவரை தியாகி என புகழ்ந்ததோடு, அவரை கொன்ற தோட்டாக்களைச் சுட்ட துப்பாக்கிக்கு நான் ஆயிரக்கணக்கான சாபங்களை விடுகிறேன் என்று கூறினார். மேலும், ஆப்கானிஸ்தானில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில் டேனிஷ் கொல்லப்பட்டார் என கூறினாரே தவிர, தலிபான் பயங்கரவாதிகளால்தான் அவர் கொல்லப்பட்டார் என கடைசிவரை கூற மறந்துவிட்டார். என்.டி.டிவி மட்டுமல்ல, இந்த கொலைக்கு பெரும்பாலான ஊடகங்கள், தலிபான் பயங்கரவாதக் குழுவை நோக்கி விரல் நீட்ட முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.