தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை 2வது கட்டமாகவும் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி ஒன்றுக்கு குறைந்தது 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.