ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ சோதனை

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பிற்கு தற்போது பாரதம் தலைமை ஏற்றுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் பல துறைகளை சேர்ந்த மாநாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சுற்றுலா துறை தொடர்பான ஜி20 மாநாடு வரும் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது. இதற்காக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய பாதுகாப்பு படை, கடற்படை சிறப்பு கமாண்டோ படையான மார்கோஸ், எல்லைப்பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் காவல்துறையினர் என பல பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று  தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபுரா, அனந்த்நாக், சோபியான், பூஞ்ச், குப்வாரா என 7 மாவட்டங்களில் 15 இடங்களில் சோதனை நடத்தினர்.