சேவாபாரதி ஆம்புலன்ஸ் சேவை

கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் மக்களுக்கு உதவ, இருபத்தி நான்கு மணிநேர ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறது கேரள சேவாபாரதி. இதற்காக நான்கு ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. முதற்கட்டமாக கொரோனா அதிகம் பாதித்த இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் இந்த சேவை துவக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி திருச்சூர் சேவாபாரதி மாநில அலுவலகத்தில் நடந்தது.