சமரசத்திற்கு அல்ல சமருக்கு

ராமநாதபுரத்தில் நடந்த பா.ஜ.க சட்டசபை, மக்களவைத் தொகுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன், “அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கவனித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். ‘முதல்வர் ஸ்டாலினை நாங்கள் எப்போது சமரசத்திற்கு அழைத்தோம். மக்கள் பிரச்னைகளுக்கு அவருடன் சமருக்குத்தான்’ நாங்கள் தயாராகியுள்ளோமே தவிர சமரசத்திற்கல்ல. அமைச்சர் மீது மட்டுமல்ல எந்த மனிதர் மீதும் செருப்பு வீசக் கூடாது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது சேலம் அருகே என் மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசினர். அதை பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் ஒதுங்கி சென்றேன். அரசியல் ஆக்கவில்லை” என கூறினார்.