சபாஷ் ஜெய்சங்கர்

இலங்கை தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கு சென்றுள்ள பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீன்வளத்துறையில் இரு நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ‘அமைச்சரின் இந்த முயற்சி, இலங்கை தமிழர்களின் நலனுக்காக பிரதமர் மோடி மேற்கொள்ளும் அயராத முயற்சிகளின் பிரதிபளிப்பாக உள்ளது’ என தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் வரவேற்பு தெரிவித்துள்ளார்.