கோயில் முன் கிறிஸ்தவ பிரார்த்தனை

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள கங்காவரம் கிராமத்தில் உள்ள ராமர் கோயில் முன்பாக உள்ள ஒரு கொட்டகையில், கிறிஸ்தவர்கள் தங்களின் பிரார்த்தனை செய்வதும், கிறிஸ்தவ பாடல்கள் பாடுவதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அங்குள்ள சில ஹிந்துக்கள் கேட்டபோது, அவர்கள் மீது கற்பழிப்பு புகார் தருவோம் என கிறிஸ்தவ கூட்டம் மிரட்டியது. ஹிந்துக்கள் இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அதிகாரிகள் இது பொது இடம், மதசார்பற்ற இடம், இங்கு அவர்கள் பிராத்தனை செய்வதை தடுக்க முடியாது என கூறி தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்தனர். இதனை வன்மையாக கண்டித்துள்ள ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர்கள், இதுபோன்ற மத அத்துமீறலுக்கு வழி வகுத்துள்ள ஆந்திர அரசை கண்டித்துள்ளதுடன் இது போன்ற விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.