காவல்துறை அதிகாரிகளுக்கு விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருதில் இந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு எஸ்.பி. பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.