காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

பஞ்சாப்பை தனி நாடாக்க கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வரும் அமைப்புகளில் ஒன்று நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இது அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது. இவர்கள் தரப்பில், ஹிமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவைச் சேர்ந்த 20 பத்திரிகையாளர்களுக்கு பதிவு செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தன்னை இந்த அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் என, அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், ஹிமாச்சலில் முதல்வரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான ஜெய்ராம் தாக்குர் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபின் ஒரு பகுதியாக ஹிமாச்சல் இருந்தது. முதற்கட்டமாக பஞ்சாப்பை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அதன்பின், ஹிமாச்சல பிரதேசத்தையும் கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.