காலத்துக்கேற்ற கல்விக்கொள்கை

புதிய கல்விக் கொள்கை முறை குறித்து பேசிய பிரதமர் மோடி, “புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய கல்வி முறை முந்தைய காலங்களில் கடினத்தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் புதிய கல்வி கொள்கை அதை மாற்றி அமைத்துள்ளது. இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் ஆதரவுகள் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. இது நமது கல்வித்துறை வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஆசிரியர்கள் பங்கு என்பது வகுப்பறையில் மாணவர்களுக்குபாடம் கற்பித்தல் மட்டும் அல்ல. இந்த எண்ணத்தை ஆசிரியர்கள் அகற்ற வேண்டும். தற்போதைய நவீன தொழில் நுட்பத்தால் உலகம் உங்கள் கையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பத்தையும் கற்பிக்க வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், கல்வி முறையின் மீது கவனம் செலுத்துப்பட்டுள்ளது. இது சிறந்த அடித்தளத்தை உருவாக்கும். மேலும் புதிய தொழில்நுட்பம் கொண்ட புதிய வகுப்பறைகளை உருவாக்கவும் இந்த நிதிநிலை அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் உள்ளன. நிகழும் அமிர்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினரின் தேவைக்கேற்ப, புதிய கல்வி கொள்கை முறை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.