காணாமல்போன குளம்

விழுப்புரம் திரு.வி.க. நகரில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான குளம் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது அங்கு குளம் அங்கு இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. இது தொடர்பாக பிரதோஷ பேரவைத் தலைவர் நடராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரத்தை கேட்டார். அவருக்கு அறநிலையத்துறை அனுப்பிய பதிலில், கோயில் சொத்துக்கள் விபரம் மற்றும் புலம் எண் 5ல் கருங்கல்லால் ஆன குளம் இருந்தது. தற்போதைய நிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தனர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்கள் விபரங்களை தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்ட தகவல் பலகையில், குளம் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கோயிலுக்குச் சொந்தமான குளம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி குளத்தை மீட்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குளத்தை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும் கண்டித்துள்ளனர்.