கஞ்சா விற்ற கம்யூனிஸ்ட் பிரமுகர்

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைத் தலைவராக இருப்பவர் ஜித்தின் மோகன். இவரது நண்பர் ஆனந்த். இருவரும் கஞ்சா விற்று வருவதாக கலால்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினருடன் இணைந்து, கலால் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, காரில் 2 கிலோ கஞ்சாவுடன் பயணித்த ஜித்தின் மோகனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆனால், அவரது நண்பர் ஆனந்த் தப்பி ஓடியோடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.