ஏ.பி.ஜி.பி கோரிக்கை மனு

தமிழக அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) சார்பாக ஏ.பி.ஜி.பி’யின் வட தமிழக செயலாளர் R. பசுபதி மற்றும் வட தமிழக தலைவர் K.வெங்கடராமன் ஆகியோர், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஜி.எம் மல்யா’விடம் தமிழக ஏ.பி.ஜி.பியின் கோரிக்கை மனுவை அளித்தனர்.  இதில் மூத்த குடிமக்கள், மகளிர்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு கட்டண பயண சீட்டை மீண்டும் வழங்குவது, பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குவது, நீண்ட பயணங்களில் ஊர்களுக்கு இடையே வழங்கப்பட்டு வந்த பிரேக் ஜர்னி டிக்கெட், டெலஸ்கோப்பிக் டிஸ்டன்ஸ் கால்குலேஷன், சர்க்குலர் டிக்கெட்டை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.