எஸ் 400 வழங்கும் ரஷ்யா

கடந்த அக்டோபர் 2018ல் பாரதம் ரஷ்யா எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த அமைப்புகள் 400 கி.மீ தூரத்தில் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் பெற்றது. இந்த S 400 Triumf வான் பாதுகாப்பு அமைப்புகளை திட்டமிட்டப்படி பாரதத்திற்கு டெலிவரி செய்ய தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் ராணுவ தொழில்நுட்ப கூட்டமைப்பின் இயக்குநர் டிமிட்ரி சுகேவ் கூறியுள்ளார். இந்த அமைப்புகள் ஏற்கனவே சீனா மற்றும் துருக்கியில் செயல்பாட்டில் உள்ளன.