என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது

கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முடிவுக்கட்ட, கொலையாளிகள் தப்பிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் கருணையின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் என்கவுண்ட்டருக்கு தயாராக இருக்கிறோம். இதுகுறித்து முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். பிரச்சினையை தூண்டி விடுபவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். முதல்வர் தெளிவான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். வரும் நாட்களில் குற்றம் புரிபவர்கள் இத்தகைய சம்பவங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். என்கவுண்ட்டர் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்பாவி மக்களை காப்போம். பிரவீன் நெட்டார் குடும்பம் அனுபவிக்கும் வேதனையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது” என்று கூறினார்.