இளவட்டக்கல் போட்டி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மங்காபுரம் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், சேவாபாரதி மற்றும் சமுதாய நல்லிணக்க பேரவை இணைந்து இருபதாம் ஆண்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலையான இளவட்டக்கல் தூக்கும் போட்டி தொடர்ந்து இங்கு 20 வருடமாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் நடைபெற்றது. இப்போட்டியில் பெருந்திரளாக இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு என தனித்தனியே போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000 இரண்டாம் பரிசாக ரூ. 4,000 மூன்றாம் பரிசாக ரூ. 3,000 மதிப்பு கொண்ட பொருட்களும் ஆறுதல் பரிசு ஏழு நபர்களுக்கும் வழங்கப்பட்டது. முதல்முறையாக 110 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.