ஆர்.எஸ்.எஸ் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் முன்னறிப்பு இன்றி உபரிநீர்  திறக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. குடிநீர் உள்ள கிணற்றில் காட்டாற்று தண்ணீர் கலந்துள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கொல்லங்கோடு, வைக்கல்லூர் பகுதிகளில் அதிக சேதம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி தன்னார்வ தொண்டர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுகள், உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.