ஆராய்ச்சிக்கு பாரதம் ஆதரவளிக்கும்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் நடைபெறும் உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில், எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாரதத்தின் உயர்நிலை கூட்டு அமைச்சகக் குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை ஏற்றார். பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து தயாரித்த ஒருங்கிணைந்த உயிரி சுத்திகரிப்பு ஆலை இயக்கத்தின் புத்தாக்க செயல் திட்டத்தை ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து 7வது புத்தாக்க இயக்கம் மற்றும் 13வது தூய்மை எரிசக்தி அமைச்சகங்கள் 2022 ஆகியவற்றின் உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றத்தில் நிலையான உயிரி எரிசக்தி மற்றும் உயிரி சுத்திகரிப்பு ஆலைகள் குறித்த முதலாவது வட்டமேசை மாநாட்டில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், “சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை இந்த திட்டம் லட்சியமாக கொண்டுள்ளது. இதனை அடைவதற்கும், அரசு மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் எரிசக்தி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல் திறனிற்கு நிதி உதவியை அதிகரிப்பது அவசியம்” என்றார். எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வருவதற்காக பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிட்ட அமைச்சர், சோதனை முயற்சியாக ஹரியானா மாநிலத்தின் பானிபட்டில் அமைக்கப்பட்டு வரும் எத்தனாலுக்கான ஒருங்கிணைந்த நொதி உற்பத்தியுடன் கூடிய, நாள் ஒன்றுக்கு 10 டன் திறன் கொண்ட பாரதத்தின் முதல் உள்நாட்டு ஆலை, வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறையில் பசுமை குடில் எரிவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உயிரி தொழில்நுட்பத் துறையின் வாயிலாக மேம்பட்ட உயிரி எரிபொருட்கள் மற்றும் கழிவு முதல் எரிசக்தி தொழில்நுட்பங்கள் வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பாரதம் ஆதரவளித்து வருகிறது” என்று பெருமையுடன் அறிவித்தார்.