ஆதிகரிக்கும் பெண்கள் கடத்தல்

பீகார் மாநிலத்தில் உள்ள சஹர்சா மாவட்டத்தின் புகழ்பெற்ற மாதேஷ்வர் தாம் சிவன் கோயிலுக்குச் சென்று இரவு தனது தாயுடன் ஒரு 15 வயது சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பிரதான சாலையை நெருங்கியபோது சில மர்ம நபர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் வந்து, அந்த சிறுமியை உள்ளே இழுத்தனர். எதிர்ப்பு தெரிவித்த தாயை தள்ளிவிட்டு சிறுமியின் வாயில் துணியைவைத்து அடைத்து கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதில், இக்கடத்தலில் ஈடுபட்ட நால்வரில் முகமது ஃபிரோஸ், முகமது நிஜாம் ஆகிய இரண்டு முஸ்லிம் நபர்களை அடையாளம் காட்டியுள்ளார். பீகாரில் இத்தகைய குற்றங்கள் சமீபகாலமாக பெருகி வருகின்றன. இதில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை, இது கிட்டதட்ட பாகிஸ்தானில் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வடக்கு பீகார் பஜ்ரங் தள் தலைவர்கள் சிலர், இந்த குற்றங்களின் பின்னணியில் உள்ள முஸ்லிம் வகுப்புவாதத் தன்மையை காரணம் காட்டி இதுபோன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க காவலர்கள் தயங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பீகார் அரசும் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்படுவதால், அவர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக இத்தகைய குற்றங்களில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர் எனவும் கூறியுள்ளனர்.