அருணாச்சலில் தேசியக்கொடி

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் எல்லையில் அமைந்துள்ள புத்தமத யாத்திரை தலமான தவாங்கில் உள்ள நங்பா நாட்மே (புத்த பூங்கா) என்ற இடத்தில் 104 அடி உயர தேசியக் கொடி ஏற்றப்பட்டு உள்ளது. அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு தேசியக்கொடியை ஏற்றினார். இது 10,000 அடி உயரத்தில் இருக்கும் இரண்டாவது மிக உயரமான தேசியக் கொடியாகும். இதையடுத்து பேசிய முதல்வர், ‘தேசியக் கொடி, மாநிலத்தின் அனைத்து தேசபக்தியுள்ள மக்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த சாதனைக்காக ராணுவம், சஷாஸ்த்ரா சீமா பால், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப்படை, தவாங் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் எம்எல்ஏ ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். அருணாச்சல பிரதேசம் எங்களுக்குதான் சொந்தம் என்று உளறிக்கொண்டிருக்கும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேசியக்கொடி தினமும் சற்று எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்யும்.