அன்னை சந்திரகாந்தாவிடம் பிரார்த்தனை

நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்திரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் அன்னை மீதான துதிகளை பகிர்ந்துள்ள பிரதமர், “நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்திரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்தார்.