அனுமன் சிலை மீட்பு

கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தின் அரியலூரில் உள்ள கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துப் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்க நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சியால், நமது நாட்டில் இருந்து கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிலைகள் கடந்த 9 ஆண்டுகளில் மீட்கப்பட்டுள்ளன. அதனுடன் இன்று, கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தின் அரியலூரில் உள்ள கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.