அதிகரிக்கும் பலாத்கார குற்றங்கள்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், பாலியல் பலாத்கார மிகவும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான வழக்கு ஒன்றில், ஜெய்ப்பூரில் உள்ள மசூதியில் ஹபீஸ் சர்ஃபராஸ் என்ற மதபோதகர், அங்கு மதக் கல்வி பயிலச்சென்ற ஒரு சிறுவனுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அந்த சிறுவன் வீட்டில் அளித்த புகாரின் அடிப்படையில் அவனின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணை தனியார் ஆம்புலன்ஸ் உதவியாளர் பலாத்காரம் செய்தது, மருத்துவமனையில் நிசார் கான் என்ற முஸ்லிம் இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்தது என கடந்த சில நாட்களில் ராஜஸ்தானில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி, ராஜஸ்தான் மாநில அமைச்சர் டாக்டர் மகேஷ் ஜோஷியின் மகனும் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.