அடாவடி தி.மு.கவினர்

நாமக்கல் அருகே, கோணாங்கிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் லதா. இவரது கணவர் நடராஜ் தி.மு.ககாரர். இந்த ஊரில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, குழாயின் ஒரு பகுதி தர்மலிங்கம் என்ற விவசாயியின் நிலத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக நிலத்தில் பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு தர்மலிங்கம் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதற்கு தி.மு.ககாரரான நடராஜ், தர்மலிங்கம் குடும்பத்தினரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.