அஞ்சல் தலை கண்காட்சி

தமிழக அஞ்சல் வட்ட, சென்னை நகர மண்டலத்தின் சார்பில், 75வது சுதந்திர ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான 13வது அஞ்சல் தலை கண்காட்சி (TN DIGIPEX 2022) மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது. “அஞ்சல்தலை சொல்லும் கலை” என்ற செய்தியுடன், 2022 ஜனவரி 7 முதல் 9ம் தேதி வரை, “இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம்” என்ற தலைப்பில், இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tndigipex2022.com என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.