வேலூர் இப்ராகிம் கார் மீது தாக்குதல்

தமிழக பா. ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் இளையான்குடி கண்மாய்க்கரை அருகே உள்ள ஒரு டீக்கடையில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தினார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒரு தரப்பினர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பா.ஜ.க கட்சியினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் சில மர்ம நபர்கள், வேலூர் இப்ராகிம் மற்றும் பா.ஜ.கவினர் வந்த கார்களை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் சாலை கிராமத்திற்குச் சென்ற வேலூர் இப்ராஹிம் அங்குள்ள காவல் நிலயத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் இளையான்குடியைச் சேர்ந்த ஜலாலுதீன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.