விமானப்படை தின வாழ்த்து

விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த பிரதமரது டுவிட்டர் பதிவில் “விமானப்படை தினத்தில், துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள். नभः स्पृशं दीप्तम् (நபஹ் ஸ்பர்ஷம் தீப்தம்) என்ற முழக்கத்தின்படி, இந்திய விமானப்படை பல தசாப்தங்களாக தனிச்சிறப்பு வாய்ந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆபத்து காலங்களில் அவர்கள் தேசத்தைப் பாதுகாத்து, குறிப்பிடத்தக்க மனித உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.