மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இந்த சூழலில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏ.பி.பி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில் 49 சதவீதம் பேர், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் பேர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐந்தில் மூன்று பாரத சமூகத்தினர் பிரதமர் மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக கருதுகின்றனர் என சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மற்றொரு கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.