முன் ஜாமீன் தள்ளுபடி

சீன விசா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தனக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால தற்காப்பை நீட்டித்து உத்தரவிடுமாறு கோரி இன்னொரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த கால அவகாசத்துக்குள் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால், அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் இன்னும் நீதிமன்ற உத்தரவு வெளியாகவில்லை. ஒருவேளை நீதிமன்றம் அனுமதி மறுத்தால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.