முதலாவது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இதுவரை பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வந்துள்ளது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1,860 கிலோ வரையிலும்; ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், 4,000 கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை. தற்போது இஸ்ரோ, மைக்ரோ, நானோ என 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் எஸ்.எஸ்.எல்.வி எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள்’ ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இது பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளைவிட செலவு குறைந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து முதலாவது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட், இ.ஓ.எஸ் 02 மற்றும் ஆசாதிசாட’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை இன்று சுமந்து செல்கிறது. இதில் 8 கிலோ எடைகொண்ட ‘ஆசாதிசாட்’ செயற்கைக்கோள், கிராமங்களை சேர்ந்த 75 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் உருவாக்கிய மென்பொருளை கொண்டது என்பது சிறப்பு.