மீனவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்

பிரதமர் நரேந்திர மோடி, மீனவர் சமூகத்திற்கான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சிறந்த சந்தைகள் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான பணிகள் தொடரும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் நேதேவின் டுவீட்டிற்குப் பதில் அளித்துள்ள பிரதமர், “கடினமாக உழைக்கும் நமது மீனவ சமூகத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம், மேலும் அவர்களுக்குத் தொடர்ந்து சிறந்த சந்தைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம்” என கூறியுள்ளார்.