மிரட்டல் விடுத்த முஸ்லிம் நபர்கள் கைது

மத்தியப் பிரதேசத்தின் செஹூர் பகுதியில் ஒரு நபர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டார். இதையடுத்து ஐந்து முஸ்லிம் நபர்கள் அவருக்கு கோலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, . ‘குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அங்கு ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதியை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது’ என தெரிவித்தார்.