மருத்துவ முகாம்

தேசிய மருத்துவர் சங்கம் (ஏன்.எம்.ஓ) மற்றும் ஆரோக்கியபாரதி தமிழ்நாடு இணைந்து திருவான்மியூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம், கற்பக விநாயகர் நகரில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியது. மருத்துவ நிபுணர்கள், மருத்துவ மாணவர்கள் இதில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்து சீட்டு, இலவச மருந்துகளை வழங்கினர். இந்த மருத்துவ முகாம்களில் மொத்தமாக 159 நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.