பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி கோயிலுக்கு உள்ளேயே நடைபெற்றது. தொற்று பரவல் குறைந்ததை அடுத்து  இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா தினங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெறவுள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களின் வசதிக்காக தமிழக, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறைகள் சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.