பசுபதிநாத் கோயிலில் திரளும் சாதுக்கள்

நேபாளத்தின் பசுபதிநாத் கோவிலில் சாதுக்கள் கூட்டம் அலைமோதுகிறது, பசுபதிநாத் கோயில், 51 சக்தி பீடங்களில்  ஒன்று. மகா சிவராத்திரியை முன்னிட்டு பாரதம் மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான சாதுக்கள் தற்போது அங்கே கூடத் தொடங்கியுள்ளனர். நேபாளம் மற்றும் பாரதத்தில் இருந்து மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான துறவிகள் அங்கு திரண்டுள்ளனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளம் மற்றும் ஹிந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களுல் ஒன்றான பசுபதிநாத் கோயிலில், கடந்த வருடங்களில் விதிக்கப்பட்ட உலகளாவிய கொரோனா பொது முடக்கங்களுக்குப் பிறகு தற்போது அது சாதுக்களால் நிரம்பி வழிகிறது.