நுகர்வோர் தின நிகழ்ச்சி

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் ஏ.பி.ஜி.பி சார்பில் மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொருட்கள் வாங்கும் பொழுதும், சேவை பெறும் பொழுதில் நுகர்வோர் கவனிக்க வேண்டியவை குறித்து குறுநாடகம், செய்தியாக கூறுதல் போன்ற வழிகளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் ஏழு குழுக்களாக இதில் கலந்துக்கொண்டனர்.