தென் தமிழகத்தில் தமிழக அரசின் தடைகளை தகர்த்தெறிந்து ஹிந்துக்களின் எழுச்சிப் புயல்

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்தாபன நாளான விஜயதசமி திருநாளுடன் இந்த வருடம் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஆண்டு விழா, டாக்டர் அம்பேத்கரின் 125வது ஆண்டு விழா ஆகியவை  கொண்டாடப்படுவதை முன்னிட்டு, (தமிழக அரசு விதித்த தடைகளை முறியடித்து), உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நவம்பர் மாதம் 13ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், கோயம்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில்  ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவர்களின் ஊர்வலம்  வெற்றிகரமாக நடைபெற்றது. வீரவாத்திய இசை முழங்க முன்னேறிய இந்த அணிவகுப்பில் 6,944 ஸ்வயம்சேவகர்கள் புதிய சீருடையில் பங்கேற்றனர்.