துல்லிய தாக்குதல் குண்டுகள்

இந்திய தரைப்படையின் பீரங்கி படைப்பிரிவில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் பிரங்கி குண்டுகளின் துல்லியம் சற்றே குறைவு. இதனால், ஜி.பி.எஸ் உதவியுடன் துல்லியமாக சென்று தாக்கும் குண்டுகளை ராணுவம் வாங்க உள்ளது. இந்த அதிநவீன குண்டுகள் மூலமாக இலக்கை தவிர வேறு எங்கும் சேதம் ஏற்படாத அளவுக்கு மிகத் துல்லியமாக தாக்க முடியும். 2019ல் அமெரிக்காவிடம் இருந்து ஜி.பி.எஸ் உதவியுடன் இயங்கும் எக்ஸ் காலிபர் குண்டுகள் குறைவாக வாங்கப்பட்டன. தற்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் 155 மில்லிமீட்டர் பிரங்கிகளில் இருந்து சுடக்கூடிய இவ்வகை குண்டுகள் முதல்கட்டமாக 1,966 வாங்கப்படுகின்றன.