திருக்குறள் ராக்கி கயிறுகள்

டெல்லியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்தனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை அன்புடன் வழங்கியுள்ளனர். அவ்வகையில், டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணிபார்க் குழும நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் ராமசுப்ரமணியன், “மிகுந்த அன்புடனும் நன்றியுடனும், நம் நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களுக்காக 1.5 லட்சம் ராக்கிகளைக் கொண்டு வந்துள்ளோம். அவற்றில் 75,000 ராக்கிகளில் திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 75,000 ராக்கிகள் கையால் செய்யப்பட்டவை” என்று கூறினார். ராஜ்நாத் சிங், “நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில், இந்த ராக்கிகளை நான் நேரடியாக முப்படைகளின் ராணுவ தளபதிகளுக்கும் வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். மாணவர்கள் கொண்டுவந்துள்ள ராக்கிகள் ராணுவ வீரர்களை முழுமையாக சென்றடையும்” என்று தெரிவித்தார்.