தாய்மதம் திரும்பிய 500 பேர்

பஞ்சாப் எல்லைப் பகுதிகளையொட்டி உள்ள 12 கிராமங்களில் வசித்து வந்த 56 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் மீண்டும் தாங்கள் பாரம்பரிய தர்மமான சீக்கிய தர்மத்திற்கு திரும்பியுள்ளனர். ஆந்திரா, தமிழகத்திற்கு அடுத்து பஞ்சாபில் மிக வேகமாக அதிக எண்ணிக்கையில் கிறிஸ்துவ மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பட்டியல் இன சீக்கியர்களை இலக்காக வைத்து மதமாற்றம் நடக்கிறது. இந்த பேரபாயத்தை உணர்ந்த எஸ்.ஜி.பி.சி., ஹிந்து அமைப்பினர் தாய்மதம் திருப்பும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.