சேவாபாரதி சேவை மையம்

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி  நாகாம்மாள் ஞானசம்பந்தம் சேவை மையம் துவக்க நிகழ்ச்சி கடந்த 21.01.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் குமாரசாமி, தேசியசேவா சமிதி தலைவர் ஜவஹர்லால், சேவாபாரதி மாநில அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேவாபாரதி சென்னை நகரத் தலைவர் மதிவாணன் தமது பூர்வீக வீட்டை இதற்காக தானம் அளித்திருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர். இம்மையத்தில் தையல் பயிற்சி வகுப்பு, கணினி பயிற்சி, வகுப்பு இலவச கல்விதான மையம், பண்பாட்டு வகுப்பு,  மருத்துவ சேவை மற்றும் இ ஷ்ரம் உள்ளிட்ட பல சேவைப் பணிகள் நடைபெற உள்ளன.