குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து பா.ஜ.க மனித சங்கிலி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் பா.ஜ., கட்சியினர் மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, குடியுரிமை சட்ட திருத்த மசோதவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது, போராட்டங்களும் நடந்தது.இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்க பா.ஜ., தலைமை உத்தரவுபடி, கடந்த மாதம் 25ம் தேதி முதல் வரும் 20 வரையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மனித சங்கிலி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியில் பா.ஜ., சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நேற்றுமனித சங்கிலி நடத்தப்பட்டது. அண்ணா சாலையில் நடந்த மனிதசங்கிலி நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலர்கள் விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம் முன்னிலை வகித்தனர். நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு, நாகராஜன், மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில செயலர்கள் முருகன், லட்சமி, முருகானந்தம், மகளிரணி ஹேமமாலினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.