கட்டப்பட்ட யானை

ஒரு இடத்தில் யானை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த வழியே போன ஒரு சிறுவன், ஒரே ஒரு கயிறு மட்டும்தான் யானையின் ஒரு காலில் கட்டி இருக்கிறது, இந்த யானை நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்தக் கயிற்றை அறுத்து கொண்டு போகலாம், இவ்வளவு பெரிய யானை ஏன் அதை அறுத்துக் கொண்டு போகவில்லை என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் அதைப்பற்றி என்று கேட்டான்.

இந்த யானை சிறியதாக இருக்கும்போது இந்த கயிற்றால்தான் கட்டினோம். அப்போது இந்த கயிற்றை அதனால் அறுக்க முடியாது. ஆனால், யானை வளர வளர தன்னால் இந்த கயிற்றை அறுக்கவே முடியாது என்று எண்ணி அதற்கு முயற்சிக்கவே இல்லை என்றார் பாகன்.

இந்த யானையை போல நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்!? தோல்வி, நமது வெற்றியின் முதற்படியே தொடர் முயற்சியே நமது வெற்றிக்கு வழி வகுக்கும்.