ஒலிம்பிக்கில் வீரர்களுடன் மோடி

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் பாரதத்தின் சார்பில் 115க்கும்மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13ம் தேதி மாலை 5 மணி அளவில் அவர்களுடன் காணொலி மூலமாக உரையாட உள்ளார்.