ஊரகப் பகுதிகளை வளப்படுத்தும் திட்டம்

டெல்லியில் இன்று நடைபெற்ற அரசு மின்னணு சந்தையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பரிசு முறையை தொடங்கிவைத்து பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப்பணியாளர்களை மேலும் விரிவுப்படுத்த மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்பு உதவும். நாட்டின் ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் உதவுகிறது. இப்பொருட்களை சர்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சர்வதேச கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஜி 20 மாநாடு பாரதத்தில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருட்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம்” என்று கருத்து தெரிவித்தார்.